Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக இளைஞர்களுடன் புத்தாண்டை கொண்டாடுவது மகிழ்ச்சி.. பிரதமர் பதிவு..

தமிழக இளைஞர்களுடன் புத்தாண்டை கொண்டாடுவது மகிழ்ச்சி.. பிரதமர் பதிவு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Jan 2024 1:34 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தற்போது தமிழகத்தில் சுமார் 19,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் மற்றும் அடிக்கல் நாட்டியும் இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்றைய தினம் தமிழகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் தமிழக இளைஞர்களுடன் நான் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தன்னுடைய கருத்தையும் பதிவு செய்து இருக்கிறார்.


2024-ம் ஆண்டை தமிழ்நாட்டில் இளைஞர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடங்கியதற்கு பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டை தமிழ்நாட்டில், இளைஞர்களிடையே ஒரு பொது நிகழ்ச்சியுடன் தொடங்கியது குறித்து மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் வெளிப்படுத்தினார்.


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:"2024-ம் ஆண்டின் எனது முதல் பொது நிகழ்ச்சி மகத்தான மாநிலமான தமிழ்நாட்டில் நடந்தது. அதுவும் நமது இளையோர் சக்திக்கு முன்னிலையில் இடையே நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News