Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பூர் வருகிறார் பிரதமர்! என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவில் பிரதமர் மோடி!

திருப்பூர் வருகிறார் பிரதமர்! என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவில் பிரதமர் மோடி!

SushmithaBy : Sushmitha

  |  31 Jan 2024 1:50 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது 2024 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டாவது நாளில் தமிழகத்திற்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இதற்குப் பிறகு கடந்த 19ஆம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகை புரிந்து சென்னையில் நேரு மைதானத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிறகு திருச்சி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த முறை வந்த பொழுது மூன்று நாட்கள் தமிழகத்தில் தங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயணம் வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி திருப்பூர் பல்லடத்தில் நிறைவடை உள்ளதால் அந்த நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது அது மட்டுமின்றி அன்றைய தினம் பல நலத்திட்ட உதவிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News