Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரிடம் தெய்வீக சக்தி இருப்பதை உணர முடிகிறது.... காங்கிரஸ் மூத்த தலைவர் பேட்டி!

பிரதமரிடம் தெய்வீக சக்தி இருப்பதை உணர முடிகிறது.... காங்கிரஸ் மூத்த தலைவர் பேட்டி!

SushmithaBy : Sushmitha

  |  3 Feb 2024 12:14 PM GMT

பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள கல்கி தாம் பவுண்டேஷன் அமைப்பின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆச்சாரியா கிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கியுள்ளார். பிரதமரை சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த ஆச்சாரியா கிருஷ்ணம், முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பிதழை வழங்கினேன், என் அழைப்பிதழை அன்போடு ஏற்றுக் கொண்ட பிரதமர் விழாவிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரை நான் சந்திக்கும் பொழுது அவரிடம் ஒரு தெய்வீக சக்தி இருப்பதை என்னால் உணர முடிந்தது.

அந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை! அதோடு இதனை நான் கூறுவதிலும் எனக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை! மேலும் காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவால் அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு மிகுந்த வருத்தம் அடைகிறேன் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், கல்கி தாம் பவுண்டேஷன் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு ஆச்சார்ய கிருஷ்ணம் அழைப்பிதழ் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News