Kathir News
Begin typing your search above and press return to search.

விண்ணில் மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் - யார் யார் செல்கிறார்கள்!

விண்ணில் மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் - யார் யார் செல்கிறார்கள்!

SushmithaBy : Sushmitha

  |  27 Feb 2024 10:12 AM GMT

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 என்ற திட்டங்கள் மூலம் நிலவை ஆய்வு செய்யும் சாதனையையும் சூரியனை ஆய்வு செய்யும் திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்திய இந்திய விண்வெளி துறையான இஸ்ரோ தற்போது விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

அப்படி விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் ரஷ்யாவிற்கு சென்று பயிற்சியும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று ககன்யான் திட்ட பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ககன்யான் திட்ட பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி விண்ணிற்கு செல்ல உள்ள வீரர்களையும் அறிமுகம் செய்து கௌரவித்துள்ளார். அப்படி ககன்யான் திட்ட மூலம் விண்ணில் செல்ல உள்ளவர்கள் விமானப்படையை சேர்ந்த குரூப் கேப்டன்களான பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், பிங்க் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோரை அறிமுகம் செய்து பிரதமர் அவர்களுக்கு அடையாள பட்டையை வழங்கி கௌரவித்துள்ளார் பிரதமர்!

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News