Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர் கேள்விகளால் தாங்கமுடியாமல் கதிர் செய்திகள் எக்ஸ் பக்கத்தை ப்ளாக் செய்த உதயநிதி..

தொடர் கேள்விகளால் தாங்கமுடியாமல் கதிர் செய்திகள் எக்ஸ் பக்கத்தை ப்ளாக் செய்த உதயநிதி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 March 2024 10:05 AM GMT

சமூக வலைத்தளம் என்பது பொதுவான ஒன்றாக தற்போது வரை இருந்து வருகிறது. குறிப்பாக அரசியலில் ஈடுபடும் பல்வேறு தரப்பினர் தங்களுடைய வாதங்கள் மற்றும் எதிர் வாதங்களை சமூக வலைத் தளங்களின் மூலம் தெரிவித்து இருக்கிறார்கள். ஆளும் தரப்பினருக்கு எதிர் தரப்பினர் கடுமையான வாதங்களையும், உண்மைகளையும் தெரிவிக்கும் பொழுது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆளும் கட்சி தரப்பினர் அவர்களை சமூக வலைத்தளங்களில் பிளாக் செய்து விடுகிறார்கள். அத்தகைய நிகழ்வு ஒன்று தற்போது நடந்து இருக்கிறது. கதிர் செய்திகள் அன்றாட நிகழ்வுகளை அலசி ஆராயும் செய்தி வலைத்தளமாக இருந்து வருகிறது.


குறிப்பாக ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் நடக்கும் உண்மை நிகழ்வுகளையும், மக்களின் உண்மை நிலை என்ன? என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு வலைத்தளமாக தற்போது வரை இருந்து வருகிறது. உண்மை செய்திகள் என்பது என்ன? என்பதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கதிர் செய்தியின் நோக்கங்கள் தற்போது வரை மக்களிடம் நல்ல நம்பிக்கையை பெற்று விளங்கி இருக்கிறது. அந்த வகையில் கதிர் செய்தியின் தொடர்ச்சியான கேள்விகள் காரணமாக, ஆளும் தரப்பினர் மத்தியில் ஒரு புயலை கிளப்பி இருக்கிறது.


அதனால் தற்போது தி.மு.க அமைச்சரும் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கதிர் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தை பிளாக் செய்து இருக்கிறார். இந்த ஒரு செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாகி இருக்கிறது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News