Kathir News
Begin typing your search above and press return to search.

பாதுகாப்புத் துறையில் ஒரு லட்சம் கோடியை தாண்டியது உள்நாட்டு உற்பத்தி - பாதுகாப்புத் துறை அமைச்சர் பேச்சு!

பாதுகாப்புத் துறையில் ஒரு லட்சம் கோடியை தாண்டியது உள்நாட்டு உற்பத்தி - பாதுகாப்புத் துறை அமைச்சர் பேச்சு!

SushmithaBy : Sushmitha

  |  4 March 2024 11:09 AM GMT

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறையில் புதுமையான தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை இன்று துவங்கி வைத்துவிட்டு உரையாற்றினார் அதில்,

நமது சொந்த நாட்டிலேயே ஆயுதங்கள் மற்றும் அவற்றின் உபகரங்கள் சொந்த மக்களால் தயாரிக்கப்பட வேண்டும். இதற்காகவே நாங்கள் உழைத்து வருகிறோம்! நமது பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி 2014 ஆம் ஆண்டில் சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது ஆனால் தற்பொழுது ஒரு லட்சம் கோடி ரூபாயை இந்த உள்நாட்டு உற்பத்தி தாண்டி சாதனை படைத்துள்ளது!

மேலும் எந்த ஒரு முக்கியமான துறையிலும் இந்தியா இறக்குமதியை நம்பி இருக்க முடியாது, அதேபோன்று பாதுகாப்பு உபகரங்கள் மற்றும் ஆயுதங்களின் இறக்குமதியை நாம் தொடர்ந்து நம்பிக் கொண்டு இருந்தால் அது மற்ற நாடுகளை நாம் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கி விடும்! அதோடு பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் தண்ணீரை இல்லாமல் சுதந்திரமாக முடிவும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

2014 க்கு முன்பும் முந்தைய ஆட்சி காலங்களிலும் பாதுகாப்பு உபகரங்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டதை நாம் பார்த்திருப்போம் அப்படி அவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டால் இக்கட்டான சூழ்நிலைகளில் பல சிரமங்களை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். அதுமட்டுமின்றி இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி அடையும்போது தொழில்நுட்ப துறையில் நாடும் முன்னேற்றம் அடையும் என்று கூறினார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News