Kathir News
Begin typing your search above and press return to search.

ஒத்துழைப்பு வழங்காத தமிழக அரசு! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புகார்!

ஒத்துழைப்பு வழங்காத தமிழக அரசு! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புகார்!

SushmithaBy : Sushmitha

  |  5 March 2024 10:26 AM GMT

அரசியல் கட்சிகள் தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக கொடிக்கம்பங்களை நட்டு வருவதாகவும் அவற்றை அகற்றக்கோரி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தமிழக அரசும் தமிழக போலீசாரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.

அதாவது இது குறித்த வழக்கை சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார், அந்த வழக்கு தொடர்பான விசாரணையும் இன்று நீதிபதி சஞ்சய் கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் வந்தது. அப்பொழுது அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக வைத்துள்ள கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு தமிழக அரசும் போலீசாரும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

இதனால் தமிழக தலைமைச் செயலாளரும் எதிர் மனுதாரர்களாக சேர்ந்த நீதிபதிகளும் தாமாக முன்வந்து இது குறித்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு மார்ச் 11ம் தேதிக்கு இந்த விசாரணையை தள்ளி வைத்ததுள்ளது!


Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News