Kathir News
Begin typing your search above and press return to search.

பாதுகாப்புத் துறையில் சுயசார்பு அடையும் இந்தியா - ராஜ்நாத் சிங் பேச்சு!

பாதுகாப்புத் துறையில் சுயசார்பு அடையும் இந்தியா - ராஜ்நாத் சிங் பேச்சு!

SushmithaBy : Sushmitha

  |  7 March 2024 12:00 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் சுயசார்பு இந்தியா தன்னிறைவு அடையும் இந்தியா என்ற வாக்கியங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு அவற்றிற்கு ஏற்ற நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டு வருகிற நிலையில் "எங்கள் அரசு தான் பாதுகாப்பு துறையில் சுயசார்பை கொண்டு வந்தது" என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


அதாவது மற்றவர்களை நாம் சார்ந்து இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து வெளிவந்து முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும்! ஒரு நாடு மற்ற நாடுகளின் தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கக் கூடாது அப்படி சார்ந்து இருந்தால் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு தீங்கு தான் ஏற்படும், மேலும் பிரதமர் நரேந்திர மோடி நம் நாடு மற்ற நாடுகளை சார்ந்து இருக்கும் மனநிலையை நீக்க பாடுபட்டு வருகிறார்.


அதோடு காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த பொழுது பாதுகாப்பு துறைக்கு முக்கியத்துவம் என்பது கொடுக்கப்படவில்லை, ஆனால் பாதுகாப்பு துறையில் சுயசார்பை எங்கள் அரசு தான் கொண்டு வந்து முன்னுரிமை கொடுத்து தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறது என்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் என்ற உள்நாட்டு நிறுவனங்கள் மீது அரசு நம்பிக்கை வைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News