Kathir News
Begin typing your search above and press return to search.

செயற்கை நுண்ணறிவிற்கு மோடி அரசு முக்கியத்துவம் தருவது ஏன்?

செயற்கை நுண்ணறிவிற்கு மோடி அரசு முக்கியத்துவம் தருவது ஏன்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 March 2024 12:32 PM GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல் மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுப் பணி என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில், 10,371.92 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டில் விரிவான தேசிய அளவிலான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு மிஷனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.




இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் பொது மற்றும் தனியார் துறைகளில் உத்திசார்ந்த திட்டங்கள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும். இந்தியா செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் பல்வேறு அம்சங்களை தற்போது புகுந்து இருக்கிறது. குறிப்பாக மத்திய அரசாங்கம் இதில் பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறது.


கணினி அணுகலை பரவலாக்குவதன் மூலமும், தரவு தரத்தை மேம்படுத்துவதன் மூலமும், உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு திறன்களை வளர்ப்பதன் மூலமும், சிறந்த செயற்கை நுண்ணறிவு திறமைகளை ஈர்ப்பதன் மூலமும், தொழில்துறை ஒத்துழைப்பை செயல்படுத்துவதன் மூலமும், சமூக ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை உறுதி செய்வதன் மூலமும், நெறிமுறை செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பதன் மூலமும், இது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பின் பொறுப்பான, உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்கும்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News