ஜாபர் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிய வேண்டும்! அண்ணாமலை வலியுறுத்தல்!
By : Sushmitha
போதைப் பொருள் கடத்தலில் முக்கிய குற்றவாளியாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று தேசிய போதை பொருள் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் கைது செய்யப்பட்ட போதை கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய நபராகவும் கும்பலின் தலைவராகவும் கருதப்பட்டு வந்த ஜாஃபர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார், தேடும் பணியில் டெல்லி போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
Source : The Hindu Tamil thisai