Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் லட்சாதிபதி சகோதரி திட்டம்.. மோடி அரசின் பெரிய முயற்சி..

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் லட்சாதிபதி சகோதரி திட்டம்.. மோடி அரசின் பெரிய முயற்சி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 March 2024 11:28 AM GMT

பரம ஏழைகளின் வாழ்க்கையில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் தாக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டினார். மகளிர் தினமான நேற்று பிரதமர் இதுபற்றிக் கூறுகையில், பயனாளிகளில் பெரும்பாலோர் பெண்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: "பிரதமரின் ஸ்வநிதி திட்டம் பரம ஏழைகளின் வாழ்விலும் புதிய மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளது. அவர்களில் பெரும் பகுதியினர் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் ஆவார்கள்.


"மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் வலுவான பிணைப்பாக உள்ளனர் என்று கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது, "லட்சாதிபதி சகோதரி திட்டம் நாடு முழுவதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு பெரிய ஊடகமாக மாறி வருகிறது. சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் வலுவான பிணைப்புடன் உள்ளனர்."


நமோ ட்ரோன் சகோதரிகளின் புதுமை, தகுதி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றுக்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களைப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: "நமோ ட்ரோன் சகோதரிகள் புதுமை, தகுதி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் சாம்பியன்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க ட்ரோன்களின் சக்தியை நமது அரசு பயன்படுத்துகிறது."

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News