வருகிறது ஏசி மின்சார ரயில்! பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு!.
By : Sushmitha
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வழிதடத்தில் விரைவு பாதையில் ஏசி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையேயான ஏசி பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி முதல் கட்ட ஆய்வு பணிகளை கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியிலே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டது.
இந்த பணிகள் தற்போது முடிவடைய உள்ள நிலையில் ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேவிற்கு தலா 12 பெட்டிகள் கொண்ட இரண்டு மின்சார ரயிலை ஒதுக்கியது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வழிதடத்தில் ஏசி மின்சார ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதலில் சோதனை அடிப்படையில் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படும் அதற்குப் பிறகு பயணிகளின் வரவேற்பு தொடர்ந்து படிப்படியாக இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : The Hindu Tamil thisai