மோடியின் வாக்குறுதி என்றால் அதில் நிறைவேற்றப்படும் வாக்குறுதி - தெலுங்கானாவில் பிரதமர்!
By : Sushmitha
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழகத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் இன்று தெலுங்கானாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது தெலுங்கானாவின் நாகர்கர்நூல் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்பொழுது மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்! காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சிகள் தெலுங்கானா மக்களின் அனைத்து கனவுகளையும் நொறுக்கி வருகிறது!. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கானாவை அழித்தொழிக்க 5 ஆண்டுகளில் போதுமானதாக உள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சி நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஏழ்மையை ஒழிப்போம் என்று கூறி வருகிறது, ஆனால் ஏழைகளின் வாழ்வில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா! 140 கோடி இந்தியர்களே மோடியின் குடும்பம் ஆகும், கடந்த 23 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளேன் முதலில் குஜராத்தின் முதல்வராக இருந்தேன் தற்போது நாட்டின் பிரதமராக இருக்கிறேன் இவை அனைத்திற்கும் நீங்கள் தான் வாய்ப்பளித்தீர்கள்!
அதோடு இத்தனை ஆண்டுகளும் நான் எனக்காக ஒரு நாளை கூட பயன்படுத்தியதே கிடையாது என்னுடைய 140 கோடி குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவே நான் உழைத்து வருகிறேன். மோடியின் வாக்குறுதி என்றால் அது நிறைவேற்றப்படும் வாக்குறுதி என்று தான் அர்த்தம் என பிரதமர் மோடி பேசினார்.
Source : The Hindu Tamil thisai