Kathir News
Begin typing your search above and press return to search.

சூரிய இல்லம், இலவச மின்சார திட்டம்.. முன்வந்த ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்.. பிரதமர் பாராட்டு..

சூரிய இல்லம், இலவச மின்சார திட்டம்.. முன்வந்த ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்.. பிரதமர் பாராட்டு..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 March 2024 2:52 PM GMT

பிரதமரின் சூரிய இல்லம் இலவச மின்சார திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாக பிரதமர் பாராட்டு. இலவச மின்சாரத் திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்திருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் பல்வேறு மக்கள் இந்து ஒரு திட்டத்திற்காக பெரும் அளவில் தங்களுடைய ஒத்துழைப்பை தருவதாகவும் அவர் தன்னுடைய மகிழ்ச்சியை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து உள்ளார்.


சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது, "இது ஒரு சிறப்பான செய்தி! தொடங்கப்பட்ட சுமார் ஒரு மாதத்தில், 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் ஏற்கனவே பிரதமரின்-சூரிய இல்லம்: இலவச மின்சாரத் திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.


இதுவரை பதிவு செய்யாதவர்களும் விரைவில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான pmsuryaghar.gov.in என்ற பக்கத்தில் இது தொடர்பான பல்வேறு செய்திகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். "இந்த முயற்சி எரிசக்தி உற்பத்தியை உறுதி செய்வதுடன், வீடுகளுக்கான மின்சார செலவு கணிசமாகக் குறைவதை உறுதிசெய்கிறது. இது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை (லைஃப்) ஒரு பெரிய அளவில் ஊக்குவிக்க தயாராக உள்ளது, இது புவியின் நன்மைக்கும் பங்களிக்கிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பகிர்ந்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News