வாழ்நாள் சாதனை விருதான பூடானின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி!
By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.
பூடான் சென்ற பிரதமரை அந்த நாட்டுப் பிரதமரான செரிங் டோபே நேரில் சென்று வரவேற்று அந்நாட்டு குழந்தைகள் உடன் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து பிரதமர் சாலை மார்க்கமாக பயணித்து சென்றார் அப்படி பிரதமர் சாலை மார்க்கமாக சென்ற வழிநெடுகிலும் இந்தியா மற்றும் பூடானின் தேசிய கொடிகள் என்று அந்நாட்டு மக்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
மேலும் அந்நாட்டு மன்னர் ஜிக்மே கேசர் சமூகத்துக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருதான தி ஆர்டர் ஆஃப் த டிரக் கியோல்போ என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி உள்ளார். அதோடு பிரதமர் மோடி இந்த விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டு அரசாங்க தலைவர் என்று பெருமையும் பெறுகிறார்.
Source : Daily thanthi