ஒன்று சேர்கிறதா அதிமுக - திமுக?..அண்ணாமலை கூறிய பரபரப்பான தகவல்!
By : Sushmitha
தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகளை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் அறிவித்துள்ளது. இதனை அடுத்து கோவை வேட்பாளராக பாஜக சார்பில் அம்மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட உள்ளார்.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 2019-ல் அளித்த 295 வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜக நிறைவேற்றி உள்ளது திமுகவைப் போல் சொன்ன விஷயத்தை மீண்டும் சொல்வது பாஜகவின் வழக்கமல்ல!
மத்திய அரசும் பிரதமர் மோடியும் கோவைக்கு என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்ன விதமான வளர்ச்சியை பிரதமர் கொண்டு வந்துள்ளார் என்பது மக்களுக்கே தெரியும். கோவையில் வளர்ச்சி வேண்டாம் என்று ஒரு கம்யூனிஸ்ட் எம்பி பிடிவாதமாக உள்ளார், மற்றொரு வேட்பாளர் கமிஷன் வாங்குவதற்காக மட்டுமே பாலம் கட்டுகிறார்! என மற்ற கட்சி குறித்து விமர்சனங்களை முன்வைத்த அண்ணாமலை ஏப்ரல் பத்துக்கு பிறகு அதிமுக மற்றும் திமுக ஒன்று சேர்வார்கள் என்று கூறினார்.
அதாவது லோக்சபா தேர்தலுக்கான கடைசி பத்தாம் தேதியில் பங்காளி கட்சிகள் ஒன்று சேர்வதை நான் எதிர்பார்க்கிறேன். அன்றைக்கு அவர்களது சுய ரூபத்தை நீங்கள் பார்த்தீர்கள் அண்ணாமலையை தோற்கடிக்க இந்த வேலையை செய்வார்கள் ஏற்கனவே கேரளாவில் இது நடந்துள்ளது தற்போது கோவையில் முதல்முறையாக பார்க்க போகிறோம் என்று பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்தார்.
Source : Dinamalar