Kathir News
Begin typing your search above and press return to search.

"காஷ்மீருக்கு பிரதமரின் இதயத்தில் தனி இடம் உள்ளது - அனுராக் தாகூர் பேட்டி"

காஷ்மீருக்கு பிரதமரின் இதயத்தில் தனி இடம் உள்ளது - அனுராக் தாகூர் பேட்டி

SushmithaBy : Sushmitha

  |  30 March 2024 1:16 PM GMT

ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடி இதயத்திலே தனி இடம் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

அதாவது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சட்டத்தை மீறி திமிருடன் செயல்பட்டு வருகிறது, அவர்கள் செய்து வருகின்ற ஊழல் அனைத்தும் தெளிவாகத் தெரிகிறது! ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதிலிருந்து பயங்கரவாதம் மற்றும் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் காஷ்மீரில் 75 சதவிகிதம் குறைந்துள்ளது.

மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழக்கும் சம்பவமும் ஐம்பது சதவீதம் குறைந்துள்ளது. இவை அனைத்தும் மத்தியில் வலுவான கட்சி ஆட்சி அமைந்த பிறகு சாத்தியமாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஆறு வழி விரைவு சாலை, எய்ம்ஸ் ஆகியவற்றை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். அதோடு ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் மோடியின் இதயத்தில் தனி இடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News