சென்னையில் பிரதமரின் ரோட் ஷோ..! எப்போது? விரைவில் தமிழகம் வரும் பிரதமர்...வெளியான தகவல்!
By : Sushmitha
தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஜனவரி மாதம் இரண்டு முறை தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதியும் தமிழகம் வந்து பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றினார். அதற்குப் பிறகு மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என அனைத்து பொது கூட்டங்களிலும் கலந்து கொண்டு மக்களிடம் பேசிய பிரதமர் கடந்த மார்ச் 18ஆம் தேதி கோவையில் திறந்த வாகனத்தில் ரோட் ஷோவை நடத்தினார். அப்பொழுது பிரதமரைக் காண ஏராளமான மக்கள் கோவையில் குவிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு ஏப்ரல் 9 ஆம் தேதி பிரதமர் வர இருப்பதாகவும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான தமிழிசை சௌந்தரராஜன், வினோத் பி. செல்வம், பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னையில் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் மேலும் சென்னையில் திறந்த வாகனத்தில் ரோட் சோவை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமரின் இந்த பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Source : The Hindu Tamil thisai