Kathir News
Begin typing your search above and press return to search.

பாதுகாப்பு பொருள்களின் ஏற்றுமதியில் வரலாறு படைத்த இந்தியா - பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

பாதுகாப்பு பொருள்களின் ஏற்றுமதியில் வரலாறு படைத்த இந்தியா - பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

SushmithaBy : Sushmitha

  |  1 April 2024 1:38 PM GMT

நமது நாடு பல வகையான சாதனைகளை அவ்வப்போது நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் இரண்டு சாதனைகளை இந்தியா கண்டுள்ளது அதில் ஒன்று, கடந்த மார்ச் மாதத்தில் நாட்டில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 1,78,484 கோடி ரூபாய்! இது 2023 மார்ச் மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூலை காட்டிலும் 11.5% அதிகமாகும்.

மற்றொன்று, பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதி ரூபாய் 21 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. அதாவது சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து 21000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகள் 2023-24 நிதியாண்டில் ரூ.21,083 கோடியாக உயர்ந்துள்ளது, இது முந்தைய நிதியாண்டை விட 32.5% என்ற அற்புதமான வளர்ச்சியாகும் என்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவேற்றுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News