Kathir News
Begin typing your search above and press return to search.

உலக நாடுகளின் தேர்தலை சிதைக்க சீனா போடும் திட்டம்..! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை...!.

உலக நாடுகளின் தேர்தலை சிதைக்க சீனா போடும் திட்டம்..! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை...!.

SushmithaBy : Sushmitha

  |  6 April 2024 12:44 PM GMT

ஏ ஐ எனப்படுகின்ற செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தற்போது எல்லா துறைகளிலும் தளங்களிலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதன் பயன்பாடு அரசியலிலும் உள்ளது, பல ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலக நாடுகளின் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி திட்டம் தீட்டி உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதாவது தைவானில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சீனா ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வெள்ளோட்டம் பார்த்துள்ளது என்றும் அதேபோன்று ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தவறான மற்றும் போலியான கருத்துக்களை உருவாக்கி மக்களை திசை திருப்பவும் ஒரு வேட்பாளரின் அறிக்கை குறித்து தவறான தகவலை பரப்பவும் முடியும் என்றும் அந்த அறிக்கையில் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனே மக்கள் யாரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவது போல உருவாக்கப்பட்ட குரல் ஏ ஐ மூலம் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதும் அண்மையில் பேசுபொருளானது, அதோடு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவின் மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தேர்தல்களையும் சீனா ஏ ஐ தொழில்நுட்பத்தை கொண்டு சிதைக்க சதி செய்கிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிக்கையில் எச்சரிக்கை விட்டுள்ளது.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News