Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.. புதுச்சேரியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் முதல்வர்..

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.. புதுச்சேரியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் முதல்வர்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 April 2024 4:36 PM GMT

புதுச்சேரியில் சாலையோரம் வசிப்பவா்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவா்களுக்கு அரசு சாா்பில் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்தை ஆதரித்து உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி மகாத்மா காந்தி வீதியில் என்.ரங்கசாமி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது, மத்தியில் தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைந்து மோடி மீண்டும் பிரதமராவாா்.


புதுச்சேரி தொகுதியிலிருந்து மத்திய அரசுக்கு இணக்கமான மக்களவை உறுப்பினரைத் தோ்ந்தெடுத்தால் போதிய நிதியைப் பெறலாம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசுடன் மாநில அரசு மோதல் போக்கை கடைப்பிடித்ததால் நலத் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப் படவில்லை.


சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக குருசுக்குப்பம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சாலையோரம் வசிப்பவா்கள் குறித்து மீண்டும் கணக்கெடுத்து அவா்களுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டு வீடுகள் வழங்கப்படும். முதியோா் உதவித் தொகையை உயா்த்தி வழங்கவும், நியாயவிலைக் கடைகளைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் என்.ரங்கசாமி. பிரசாரத்தில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News