Kathir News
Begin typing your search above and press return to search.

சோழர்கள் வாழ்ந்த மண்ணில் இருப்பது பெருமை அளிக்கிறது - ராஜ்நாத் சிங்!

சோழர்கள் வாழ்ந்த மண்ணில் இருப்பது பெருமை அளிக்கிறது - ராஜ்நாத் சிங்!

SushmithaBy : Sushmitha

  |  8 April 2024 12:48 PM GMT

இன்று தமிழகம் வருகை புரிந்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நாமக்கல்லில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து ரோட் ஷோ சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதாவது சேலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாமக்கல் பரமத்தி சாலை பிஜிபி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் இறங்கிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து ரோட் ஷோவில் ஈடுபட்டார். அவரை காண்பதற்காக சாலையின் இருப்புரத்திலும் கூடியிருந்த மக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ரோட் சோவில், இந்தியா சூப்பர் பவரான நாடாக மாறும் அதற்காக காத்துக் கொண்டிருங்கள், காங்கிரஸ் 30 ஆண்டில் செய்யாததை பாஜக பத்து ஆண்டில் செய்துள்ளது பதினோராவது இடத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதாரத்தை ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றி உள்ளது!

காங்கிரசும் திமுகவும் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று கூறினார். முன்னதாக நாகப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ்யை ஆதரித்து மத்திய அமைச்சர் திருவாரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், இந்தியாவின் ராணுவத் திறன்களை வலுப்படுத்துவதில் சோழ மன்னர்கள் முன்மாதிரியாக திகழ்ந்தனர். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் வாழ்ந்த மண்ணில் இருப்பது மிகவும் பெருமை! என பேசினார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News