சென்னையில் பிரதமரின் ரோட் ஷோ.. பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை..!
By : Sushmitha
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பிரச்சாரத்தை ஈடுபட உள்ளார். அதாவது நாளை ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரதமர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
நாளை தமிழகம் வரும் பிரதமர் மாலை 4 மணிக்கு வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான ஏசி சண்முகத்தை ஆதரித்து ரோட் ஷோ மூலம் பிரச்சாரம் செய்ய உள்ளார், அதோடு தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆரணி, சிதம்பரம் மற்றும் கடலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்ற பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.
மேலும் நாளை மாலை 6 மணி அளவில் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆதரவாக தியாகராய நகரில் ரோட் ஷோ மூலம் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனை தொடர்ந்து மத்திய சென்னை பாஜக வேட்பாளர், வட சென்னை பாஜக வேட்பாளர் மற்றும் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் பகுதி பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோட் ஷோவில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
Source : The Hindu Tamil thisai