பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழர்கள் கவனத்தைப் பெற்று வாக்குறுதிகள்..!
By : Sushmitha
2024 லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டார். மேலும் பிரதமர் தங்களது தேர்தல் அறிக்கையின் முதல் அறிக்கையை பிரதமரின் வீடு திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களுக்கு வழங்கினார். மேலும் இந்த தேர்தலுக்கு பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை,
2025 ஆம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.
திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இந்தியாவின் பெருமைமிகு தமிழ்மொழி வளர்க்கப்படும்.
மக்கள் மருந்தகத்தை 80 சதவிகித தள்ளுபடி வழங்கும் மருந்துகள் வழங்கப்படும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்று கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்.
இந்தியாவின் தெற்கு வடக்கு கிழக்கு என மூன்று திசைகளிலும் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்படும்.
இதில், உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது, இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துதல் யோகா ஆயுர்வேதம் இந்திய மொழிகளும் பாரம்பரிய இசை போன்ற பலவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து விரும்பியவர்களுக்கு பயிற்சி அளித்தலும் அடங்குகிறது.
Source : The Hindu Tamil thisai