Kathir News
Begin typing your search above and press return to search.

தொடங்கிய ராம ராஜ்ஜியத்தை யாராலும் தடுக்க முடியாது - மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்..!

தொடங்கிய ராம ராஜ்ஜியத்தை யாராலும் தடுக்க முடியாது - மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்..!

SushmithaBy : Sushmitha

  |  15 April 2024 1:52 PM GMT

மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள பாசோலியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கருக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அதாவது, இந்தியாவில் ராமராஜ்ஜியம் தொடங்கிவிட்டது இனி அதை யாராலும் தடுக்க முடியாது. ஜம்மு காஷ்மீரின் 370 பதில் சட்டப்பிரிவு ரத்து செய்தல் ராமர் கோவிலை கட்டுதல் என பாஜக தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றி விட்டது.

அதோடு பாஜக ஆட்சி அமைப்பதற்காக அரசியல் செய்யவில்லை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் செய்கிறது என்று கூறினார்.

மேலும், எங்களுடைய ஆட்சி அமைந்தாலும் அமையாவிட்டாலும் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் கண்ணியம் கௌரவத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க முடியாது. தொடங்கிய ராம ராஜ்ஜியம் நிஜமாவதை யாராலும் தடுக்க முடியாது! என்று பேசினார்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News