இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுமா..! சீர்திருத்தத்திற்கு உறுதி அளித்துள்ளது அமெரிக்கா..!

டெஸ்லா தலைவர் எலன் மாஸ்க் ஐ.நா.,வில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் ஐ.நா.,வின் அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ரிட்டன் ஆகிய நாடுகள் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இருந்த உறுப்பினர்களாக உள்ளது. மற்ற பத்து இடங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நாடுகள் நிராகரிக்கப்படுகிறது. மேலும் இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் எலன் மாஸ்க் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அனைத்து தகுதியும் இந்தியாவிற்கு உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் எலன் மாஸ்கின் கருத்து தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோபேடனிடம் ஐ.நா.,வின் பொது சபை குறித்து பேசும் பொழுது சீர்திருத்தம் பற்றியும் பேசி உள்ளார். மேலும் நடக்கின்ற நூற்றாண்டை பிரதிபலிக்கும் வகையிலும் ஐ.நா., பாதுகாப்பு சபை உள்ளிட்ட ஐ.நா., அமைப்புகளில் சீர்திருத்தங்கள் செய்வதற்கும் நாங்கள் நிச்சயமாக ஆதரவு தெரிவிக்கிறோம், சீர்திருத்தம் தேவை என்பதிலும் உறுதியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
Source : Dinamalar