Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களுக்கு சேவையாற்ற மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு வந்த உங்கள் முடிவை நான் பாராட்டுகிறேன் - பிரதமர் அண்ணாமலைக்கு கடிதம்..!

மக்களுக்கு சேவையாற்ற மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு வந்த உங்கள் முடிவை நான் பாராட்டுகிறேன் - பிரதமர் அண்ணாமலைக்கு கடிதம்..!

SushmithaBy : Sushmitha

  |  18 April 2024 1:28 PM GMT

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நாளை ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதன்படி தமிழக பாஜக தலைவரும் கோவை பாஜக எம்பி வேட்பாளருமான அண்ணாமலைக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் நீங்கள் எனக்கு பெரும் சொத்து என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, எனது சக காரிய கருத்தா அண்ணாமலைக்கு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ஒரு மதிப்பு மிக்க வேலையை விட்டுவிட்டு மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு வந்துள்ள உங்கள் முடிவை நான் பாராட்டுகிறேன். பாஜகவின் அடிமட்ட இருப்பை வலியுறுத்தவும், சட்ட அமலாக்கம் நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளை முன்னிறுத்துவதில் உண்மையிலேயே நீங்கள் முக்கிய பங்காற்றி உள்ளீர்கள்.

மக்களின் ஆசிர்வாதத்துடன் நீங்கள் நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன் உங்களைப் போன்ற குழு உறுப்பினர்கள் எனக்கு பெரும் சொத்து! உங்களது உறுதியான தலைமையால் கோவைக்கு மகத்தான பலன் கிடைக்கும் நாம் ஒரு அணியாக செயல்பட்டு தொகுதி மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் பாடுபடுவோம் என்று எழுதியுள்ளார்.

Source : தினத்தந்தி

Next Story
கதிர் தொகுப்பு
Trending News