Kathir News
Begin typing your search above and press return to search.

காலாவதி ஆகிவிட்டது காங்கிரஸ் - தெலுங்கானாவில் ராஜ்நாத் சிங் தாக்கு..!

காலாவதி ஆகிவிட்டது காங்கிரஸ் - தெலுங்கானாவில் ராஜ்நாத் சிங் தாக்கு..!

SushmithaBy : Sushmitha

  |  19 April 2024 12:50 PM GMT

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களிடம் உரையாற்றியுள்ளார்.

அப்பொழுது, காங்கிரஸ் முற்றிலும் காலாவதியாகிவிட்டது என்று நான் கூற விரும்புகிறேன். பாஜக மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்யவில்லை ஆனால் அது நீதி மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் செய்கிறது. தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை, மேலும் ஒரு மாநிலமாக தெலுங்கானா உருவாவதற்கான பெருமை பி ஆர் எஸ் இருக்கும் செல்லாது இது பலரின் தியாகங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்!

தேசத்தை கட்டி எழுப்புவதற்காகவே பாஜக அரசியல் செய்கிறது. அதோடு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை, நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News