Kathir News
Begin typing your search above and press return to search.

காவிரி ஆற்றின் தமிழக உரிமையை திமுக அடகு வைத்து விட்டதா...! அன்புமணி கேள்வி..!

காவிரி ஆற்றின் தமிழக உரிமையை திமுக அடகு வைத்து விட்டதா...! அன்புமணி கேள்வி..!

SushmithaBy : Sushmitha

  |  20 April 2024 1:07 PM GMT

பாமக தலைவர் அன்புமணி மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது, கர்நாடகா துணை முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி கே சிவகுமார் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கூறியுள்ளார். இதனை தமிழக முதல்வர் கண்டிக்க கூட முன்வராமல் அமைதி காத்து வருவது காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழகத்தின் காவிரி ஆற்றின் உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது!

எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருக்கிறதோ எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தின் காவிரி உரிமையை கர்நாடகாவிற்கு தாரை வார்ப்பது திமுகவின் வழக்கம்!

அதேபோன்று இப்பொழுதும் காங்கிரஸ் உடனான உறவிற்காக மேகத்தாது அணை விவகாரத்தில் திமுக அரசு மவுனம் காத்து காவிரி அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு அடகு வைத்து விடக்கூடாது என்று கூறியுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News