Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் இந்தியாவில் கலவரம் தான் வரும்.. அமித்ஷாவின் அனல் பறக்கும் பேச்சு...

காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் இந்தியாவில் கலவரம் தான் வரும்.. அமித்ஷாவின் அனல் பறக்கும் பேச்சு...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 April 2024 4:28 PM GMT

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் பயங்கரவாத விவகாரங்களில் மென்மையான போக்கை கடைபிடிப்பதாகவும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வறுமை, கலவரம் மற்றும் அட்டூழியங்கள் அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பீகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக பீகார் நகரில் அமைந்துள்ள கதிஹரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.


இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் உரையாற்றும் பொழுது, பிரதமர் மோடி, நாட்டில் நக்சலைட்களை ஒழித்து, பயங்கரவாதத்தை ஒடுக்கி உள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு யாரும் பதிலடி கொடுக்கவில்லை. இதற்கு மாறாக, பாலக்கோட் மற்றும் உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் என இந்தியா பதிலடி கொடுத்தது. நமது பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாதிகளை அவர்களது மறைவிடத்திலேயே அழித்தனர்.


காங்கிரஸ் ஆர்.ஜே.டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வறுமை, அட்டூழியம், வறுமை மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும். தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்கும் போது இரட்டை இன்ஜீனின் அரசினால் கிடைக்கும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்தியா கூட்டணி பிஹாரில் சர்வாதிகார ஆட்சி கொண்டுவரும் மற்றும் அவற்றுக்கு அடிக்கோள் இடும்" என்று அமித்ஷா அவர்கள் மக்களிடம் உரையாற்றி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News