Kathir News
Begin typing your search above and press return to search.

ஊழலற்ற ஆட்சியையும் அனைத்து துறைகளில் வளர்ச்சியையும் பிரதமரால் மட்டுமே கொண்டுவர முடியும் - அமித் ஷா பேச்சு..!

ஊழலற்ற ஆட்சியையும் அனைத்து துறைகளில் வளர்ச்சியையும் பிரதமரால் மட்டுமே கொண்டுவர முடியும் - அமித் ஷா பேச்சு..!

SushmithaBy : Sushmitha

  |  25 April 2024 4:17 PM GMT

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரகுநாதன் ராவை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் தேர்தல் பேரணியில் பேசி உள்ளார்.

அப்பொழுது,. காங்கிரஸ் சமீபத்தில் தான் தெலுங்கானாவில் ஆட்சியை பிடித்தது ஆனால் தெலுங்கானாவை காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஏடிஎம் ஆகியுள்ளது! பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு எதிராக காலேஸ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக காங்கிரஸ் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

தெலுங்கானாவில் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வதும் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். இதனை தெலுங்கானா மக்கள் நன்கு அறிந்து தற்போது பிரதமர் மோடி பக்கம் இருக்கிறார்கள். மேலும் தெலுங்கானா மக்கள் எல்லா இடங்களிலும் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய முடிவு செய்துள்ளனர் என்று பேசியுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News