Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் பதவியில் மோடி அவர்களே தொடர மக்கள் விரும்புகிறார்கள்.. மத்திய நிதியமைச்சர் தகவல்..

பிரதமர் பதவியில் மோடி அவர்களே தொடர மக்கள் விரும்புகிறார்கள்.. மத்திய நிதியமைச்சர் தகவல்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 April 2024 4:26 PM GMT

மோடியே மீண்டும் பிரதமர் பதவியில் தொடர மக்கள் விரும்புவதாக பெங்களூருவில் வரிசையில் நின்று ஓட்டளித்தப்பின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர்கள் காலை 7 மணியில் இருந்தே ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டு சாவடியில் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கு பதிவு செய்து இருக்கிறார்.


ஓட்டு போட்ட பிறகு வெளியில் வந்து செய்தியாளர் குழுவிற்கு பேட்டியின் போது இது பற்றி மேலும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் மோடியே பிரதமர் பதவியில் தொடர மக்கள் விரும்புகின்றனர். இன்னும் ஏராளமான மக்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து தங்களது ஓட்டினை பதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நிலையான ஆட்சி, சிறந்த கொள்கைகள், சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியை மக்கள் விரும்புகின்றனர். 1968க்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் சம்பாதித்ததில் 90 சதவீதத்தை வரியாக செலுத்தினார்கள்.

அது பற்றி இல்லம் இன்றைய தலைமுறையினருக்கு அவ்வளவாக தெரியாது. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதே நிலைமைக்கு திரும்பவும், மேலும் வாரிசு உரிமை வரியால் நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே இந்தியாவை பின்னோக்கி இழுத்தும் செல்வதும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது போன்ற எதையும் பேசாமல் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்ட பேசி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News