இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்.. இதுவரை நிலவு குறித்து வெளிவராத தகவல்..!
By : Sushmitha
நிலவின் தென் துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது இஸ்ரோ.
கடந்த 2023 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவப் பகுதி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இஸ்ரோ விண்கலத்திற்கு சந்திரயான் மூன்று விண்கலத்தை அனுப்பியது. இதில் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தனது சாதனையை படைத்து இந்தியா மற்றும் உலக நாடுகளிடையே பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் இஸ்ரோ நிலவின் துருவப் பகுதிகளில் தரைக்கட்டில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதாவது சந்திரயான் மூன்று அனுப்பிய தரவுகளை ஐஐடி கான்பூர், யுனிவர்சிட்டி ஆப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டதில் நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் 5 முதல் 8 மீட்டர் ஆழத்தில் நீரானது பனிக்கட்டியாக உறைந்து இருப்பதையும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது.
Source : Thanthi