Begin typing your search above and press return to search.
தனது சொந்த மாநிலத்தில் நாளை ஓட்டளிக்கிறார் பிரதமர் மோடி...!

By : Sushmitha
பாராளுமன்ற லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இரண்டு கட்டங்கள் மட்டுமே தற்போது முடிந்துள்ளது இதோடு நாளை மூன்றாம் கட்டமாக 12 மாநிலங்களில் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் தனது சொந்த மாநிலத்திற்கு சென்று தனது வாக்கினை செலுத்த உள்ளார். அதாவது, பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் அகமதாபாத் நகரில் நிஷான் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள ஓட்டு சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை பதிவு செய்கிறார்.
மேலும் இந்த மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 26 தொகுதிகளில் சூரத் தொகுதியில் மட்டும் ஒரு எம்பி போட்டியின்றி தேர்வாகியுள்ளார் அதனால் மீதமுள்ள 25 தொகுதிகளுக்கும் தேர்தல் நாளை நடக்க இருக்கிறது.
Source : Dinamalar
Next Story
