வறட்சி பற்றி கண்டுகொள்ளாத திமுக அரசு...பதிவிடுபவர்களை மட்டும் சிறையில் அடைக்கிறது - வானதி சீனிவாசன் காட்டம்!
By : Sushmitha
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பெண்களுக்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்டால் திமுகவில் இருக்கும் பாதி பேருக்கு மேல் தற்போது சிறையில் இருக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இன்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் தனது சட்டமன்ற அலுவலகம் முன்பு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிகமான வெயில் பதிவாக கூடிய இடங்களாக தமிழகம் மாறிக்கொண்டே வருகிறது. வெகு வேகமாக தொழிற்சாலைகளை பெருக்குவதிலும் நகர்ப்புறம் ஆக்குவதிலும் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மையில் இருக்கக்கூடிய மாநிலம் இவை காலத்தின் தேவை என்று எடுத்துக் கொண்டாலும் அவை சுற்றுப்புற சூழலோடு இணைந்து வந்தால்தான் அங்கு மக்கள் வாழக்கூடிய தமிழகமாக இருக்கும்.
மாநிலத்தின் சட்ட ஒழுங்கு, குடிநீர், வறட்சி போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளில் திமுக அரசு கவனம் செலுத்துவதை விட சமூக வலைதளங்களில் யாரெல்லாம் திமுக குடும்பத்திற்கு எதிராக விமர்சிக்கிறார்களோ அவர்கள் மீது வழக்கு போடுவதை வேலையாக வைத்துள்ளார்கள் என்று குற்றம் சாடினார்.
மேலும், எங்கள் மீது சவுக்கு சங்கர் செய்யாத விமர்சனமே கிடையாது எங்களை மோசமாக விமர்சனமும் செய்து இருக்கிறார், ஆனால் தற்போது தனது அதிகாரத்தை மாநில அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது என்று பகிரங்கமாக தனது எதிர்ப்பை முன் வைத்தார்.
Source : The Hindu Tamil thisai