பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின பெண் கவிஞரிடம் ஆசி பெற்றார் பிரதமர்..!
By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற பொழுது அங்கு காந்தமாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் பத்மஸ்ரீ விருது பெற்ற 80 வயதான பழங்குடியின பெண் கவிஞரும் சமூக ஆர்வலருமான பூர்ணமாசியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்வதோடு பிரதமர் மோடி அவர்களது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதனை தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் அப்பொழுது, ஒடிசாவில் தேர்தலுக்குப் பிறகும் ரெட்டை இன்ஜின் அரசு ஆட்சியைப் பெற்று மத்திய - மாநில தலைவர்கள் இடையேயான கூட்டு வலுபெறும். ஒடிசாவில் இருக்கும் மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களின் பெயர்களை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கால் குறிப்புகள் ஏதுமின்றி அவரால் கூற முடியுமா?
தொடர்ந்து காங்கிரஸ் மக்களை அச்சுறுத்தியே வருகிறது பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளதால் அவற்றை கூறி வருகிறார்கள் ஆனால் அவர்கள் அணு ஆயுதங்களை வாங்க எந்த நாடும் முன்வரவில்லை!
Source : The Hindu Tamil thisai