Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியை பிரமித்து பாராட்டிய நடிகை ராஷ்மிகா...

பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியை பிரமித்து பாராட்டிய நடிகை ராஷ்மிகா...

SushmithaBy : Sushmitha

  |  15 May 2024 12:48 PM GMT

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா பிரதமர் மோடியின் 10 ஆண்டுகள் ஆட்சி குறித்து பேசியுள்ளார்.

அதாவது நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமான மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் கடல் வழி அடல் சேது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கடல் வழிபாலத்தால் 2 மணி நேர பயணம் 20 நிமிட பயணமாக மாறியது. என்றாவது இப்படி ஒரு நிகழ்வு சாத்தியமாகுமா என நாம் நினைத்திருப்போமா?

உள்கட்ட அமைப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல்கள் அனைத்துமே கடந்த 10 ஆண்டுகளில் அபரிவிதமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாருங்கள் நாடு கண்டுள்ள வளர்ச்சியை! இந்தியா ஸ்மார்ட் ஆன நாடு இளம் பாரதியர்கள் வாக்களிக்க வேண்டும். அதோடு அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள் என்று மக்களும் நம்புகிறார்கள். மேலும் இந்த வளர்ச்சி இதோடு நின்று விடக்கூடாது வளர்ச்சிக்காக வாக்களியுங்கள் என பிரதமரின் பத்தாண்டு கால ஆட்சியில் நாடு கண்டுள்ள வளர்ச்சியை குறித்து பாராட்டி பேசியுள்ளார்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News