Kathir News
Begin typing your search above and press return to search.

ரயிலில் கூட மதமாற்றம் நடக்கிறதா.? கொந்தளித்த இந்து முன்னணி..

ரயிலில் கூட மதமாற்றம் நடக்கிறதா.? கொந்தளித்த இந்து முன்னணி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 May 2024 1:59 PM GMT

தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் ரயிலில் பயணம் செய்து இந்து மக்களை குறி வைத்து தான் இந்த ஒரு செயல் அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால், இந்து மக்களை மதமாற்றம் செய்யும் வேலை தான் அது. மதமாற்றம் தற்போது மிகவும் சாதாரணமாக பொதுவெளிகளில் சுலபமாக நடக்க செய்கிறது. அதுவும் ரயில் நிலையங்களில் கூட இந்த ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அன்றாடம் பயணம் செய்யும் ரயில்களில் இத்தகைய மதமாற்றும் முயற்சிகள் நடைபெறுவதைக் கண்டு இந்து முன்னணி கோபம் அடைந்து இருக்கிறது.


இந்த தகவலை கேள்விப்பட்ட இந்து முன்னணியினர் மதமாற்றம் செய்யும் நபர்களை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார்கள். உங்கள் பகுதிகளில் இது போன்று நடந்தால் உடனே எச்சரிக்கையாக இருங்கள். இது பற்றி அவர்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது, "மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ கும்பலை தடுத்து நிறுத்திய இந்துமுன்னணி பொறுப்பாளர்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் வண்டியில் கிறிஸ்தவர்கள், இந்துக்களை மதமாற்றிக்கொண்டு இருந்தனர். ஏழு நாள் முகாம் முடித்துவிட்டு சென்ற நமது பொறுப்பாளர்கள், மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ கும்பலை தடுத்து நிறுத்தி, அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்".

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News