மீண்டும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆட்சி அமைய வேண்டும்... உத்தராகண்ட் வக்பு வாரிய தலைவர் பிரார்த்தனை..!
![மீண்டும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆட்சி அமைய வேண்டும்... உத்தராகண்ட் வக்பு வாரிய தலைவர் பிரார்த்தனை..! மீண்டும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆட்சி அமைய வேண்டும்... உத்தராகண்ட் வக்பு வாரிய தலைவர் பிரார்த்தனை..!](https://kathir.news/h-upload/2024/05/16/1617731-adobeexpress2024051618433701.webp)
உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற சாபீர் சாகிப் தர்காவில் உத்தராகண்ட் மாநில வக்பு வாரிய தலைவர் சதாப் ஷாம்ஸ் மற்றும் சிலர் பிரதம நரேந்திர மோடிக்காக போர்வை போர்த்தி பிரார்த்தனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வக்பு வாரிய தலைவர் சதாப் ஷாம்ஸ் நம் நாட்டின் வளர்ச்சி பணிகள் அனைத்தும் தடம் புரளாமல் இருக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் வலிமையான ஒரு ஆட்சி அமைய வேண்டும் அதற்காக தற்போது பிரார்த்தனை செய்துள்ளோம்.
மேலும் பிரதமரின் ஆட்சியின் கீழ் கிடைக்கப்படுகின்ற வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைகிறது. இதுவரை நலத்திட்ட பலன்களை அடையாத நாட்டில் உள்ள கடைசி மனிதனும் தற்போது வீடு மற்றும் கழிப்பறை வசதிகளை பெற்று வருகிறான் அனைத்து வகையிலும் நாடு முன்னேறி வருகிறது.
அதே சமயத்தில் போர் மேகங்களானது உலகம் முழுவதும் சூழ்ந்துள்ளது. பல நாடுகள் கலவரம் மற்றும் குழப்பத்தால் பதட்ட நிலையில் உள்ளது ஆகவே இது போன்ற நேரத்தில் இந்தியாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமை தேவைப்படுகிறது அதனால் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Source : The Hindu Tamil thisai