Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜகவின் ஓட்டு வித்தியாசத்தில் சமூக ஊடகங்களில் பொய் தகவல்!

பாஜக வெற்றி பெற்ற ஓட்டு வித்தியாசம் குறித்து சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரவி உள்ளது தெரிய வந்துள்ளது.

பாஜகவின் ஓட்டு வித்தியாசத்தில் சமூக ஊடகங்களில் பொய் தகவல்!

KarthigaBy : Karthiga

  |  11 Jun 2024 2:45 PM GMT

பாஜக 100 இடங்களில் ஆயிரத்துக்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் போலியானது என்பது தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

தனியாக 240 இடங்களைப் பெற்றது. இந்நிலையில் பா.ஜ.க 30 இடங்களிலும் 500க்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்திலும் 100 இடங்களில் 1,000க்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதை காங்கிரஸ் கட்சியினர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தனர். இந்த 130 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அவற்றை கழித்தால் பாஜகவுக்கு 110 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறினார்.

இது குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சில அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இந்த புள்ளி விபரங்களை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. ஓட்டு விபரங்களுடன் ஒப்பிட்டபோது அந்த தகவல் போலியானது என்பது தெரியவந்துள்ளது .லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ரவீந்திரன் நாராயணன் பெஹாரா மிகக்குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1587 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதைவிடக் குறைவான ஓட்டுகள் வித்யாசத்தில் வேறு எந்த பாஜக வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. இவருக்கு அடுத்தபடியாக ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 1215 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராவ் ராஜேந்திர சிங் வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிராவின் மும்பை, வடமேற்கு, லோக்சபா தொகுதியில் சிவசேனாவின் ரவீந்திர தத்தாராம் பாய்கர் 48 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சிவசேனா உத்தவ் பிரிவு வேட்பாளரை தோற்கடித்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் மிகவும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக இவர் அறியப்படுகிறார்.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News