Kathir News
Begin typing your search above and press return to search.

சுத்தம் செய்ய மறுத்த மாணவி.. கிறிஸ்தவ பள்ளியில் அராஜகம்.. இந்து முன்னணி கண்டனம்..

சுத்தம் செய்ய மறுத்த மாணவி.. கிறிஸ்தவ பள்ளியில் அராஜகம்.. இந்து முன்னணி கண்டனம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Jun 2024 12:21 PM GMT

மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் மாணவி வகுப்பறையை தூய்மை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஆனால் மாணவி தன்னால் வகுப்பறையை சுத்தம் செய்ய இயலாது என்று மறுத்து இருக்கிறார். இதன் காரணமாக அவரை ஆசிரியர் அறைந்து இருக்கிறார். இந்த ஒரு சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேச்சுப்பொருள் ஆகி இருக்கிறது.


சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கிறிஸ்தவ பள்ளி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அவர்களுடைய எக்ஸ் வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிடும் பொழுது,"மயிலாடுதுறை சின்னநாகங்குடி சின்னப்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையை சுத்தம் செய்ய மறுத்த 9-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் கன்னத்தில் அறைந்த நிலையில் பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாணவியின் பெற்றோர் மாற்று சான்றிதழை பெற்று மாணவியை வேறு பள்ளியில் சேர்த்துள்ளனர்.

பள்ளிகளில் மாணவர்களை இது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என அரசு உத்தரவு உள்ள நிலையில், வகுப்பறையை சுத்தம் செய்ய மறுத்த மாணவியை தாக்கிய ஆசிரியர் மீதும் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்" என்று இந்து இளைஞர் முன்னணி வலியுறுத்தி இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News