Kathir News
Begin typing your search above and press return to search.

பிரியாணியில் பீஸ் இல்லை.. கடுப்பான தி.மு.க நிர்வாகி.. தகாத வார்த்தையால் முற்றிய வாக்குவாதம்..

பிரியாணியில் பீஸ் இல்லை.. கடுப்பான தி.மு.க நிர்வாகி.. தகாத வார்த்தையால் முற்றிய வாக்குவாதம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Sep 2024 12:55 PM GMT

'பீஸ்' இல்லாமல் பரிமாறப்பட்ட பிரியாணி:

தி.மு.கவினர் மத்தியில் சிக்கன் பிரியாணி மீதான ஆர்வம் அதிகமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில், திருவள்ளூரில் நடந்த திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில், 'பீஸ்' இல்லாமல் பரிமாறப்பட்ட பிரியாணி தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக பீஸ் இல்லாமல் பிரியாணி சப்ளை செய்யப்பட்டதாகவும் அந்த விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மீது, திமுக உறுப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருவள்ளூரில் நடந்த இந்தச் சம்பவம் கும்மிடிப்பூண்டி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தச்சூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில், மாவட்ட கவுன்சிலர்கள், அவைத்தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ஏற்ற வகையில் அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இருப்பினும், நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திமுக தொழிற்சங்கப் பிரதிநிதியும், கூட்டுறவு கடன் சங்க மேலாளருமான யுவராஜ், பிரியாணியில் சிக்கன் பீஸ் இல்லை என்று சண்டையிட்டார். வார்த்தைகள் விரைவாக மோதலாக மாறி, தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதம் முற்றியது. மேலும் இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளின் ஆன்லைன் ட்ரோல்களுக்கு பலமாக வழி வகுத்துள்ளது. குறிப்பாக இந்த ட்ரோல்களில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் பிரியாணி பரிமாறப்படும் பொழுது பீஸ்களை எண்ணி அதிகமாக வம்புகளை செய்கிறார்கள் என்று கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

Input & Image courtesy: The Commune News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News