Kathir News
Begin typing your search above and press return to search.

நீர் குழாய் திட்டத்திற்காக மொரிஷியஸுக்கு முதன்முதலில் "ரூபாய்" மதிப்பிலான கடன் வரிசையை விரிவுபடுத்திய இந்தியா!

நீர் குழாய் திட்டத்திற்காக மொரிஷியஸுக்கு முதன்முதலில் ரூபாய் மதிப்பிலான கடன் வரிசையை விரிவுபடுத்திய இந்தியா!
X

SushmithaBy : Sushmitha

  |  18 Oct 2024 2:09 PM GMT

தண்ணீர் குழாய் மாற்று திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக மொரீஷியஸ் அரசாங்கத்திற்கு 487.60 கோடி ரூபாய்க்கான புதிய கடன் வரியை இந்தியா நீட்டித்துள்ளது. எந்தவொரு நாட்டிற்கும் திட்ட நிதியுதவிக்காக இந்தியாவால் நீட்டிக்கப்பட்ட முதல் ரூபாய் மதிப்பிலான கடன் வரி இதுவாகும். இதனை இந்திய வளர்ச்சி மற்றும் பொருளாதார உதவித் திட்டத்தின் (IDEAS) கீழ், MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டமானது மொரிஷியஸில் சுமார் 100 கிமீ தொலைவுக்கு பயனற்று போன தண்ணீர்க் குழாய்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மொரிஷியஸ் விவசாய தொழில் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மனீஷ் கோபினுக்கு லைன் ஆஃப் கிரெடிட்டின் முறையான வாய்ப்பை வழங்கினார்.

இந்த வாய்ப்பை தற்போது மொரிஷியஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சியானது உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டின் மற்றொரு பிரதிபலிப்பாகும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News