Kathir News
Begin typing your search above and press return to search.

இம்மாத இறுதியில் புதிய பாம்பன் பாலத்தின் இரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!வெளியான சர்பிரைஸ் நியூஸ்!

இம்மாத இறுதியில் புதிய பாம்பன் பாலத்தின் இரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!வெளியான சர்பிரைஸ் நியூஸ்!
X

SushmithaBy : Sushmitha

  |  1 Feb 2025 1:12 PM

2022 டிசம்பரில் கட்டமைப்பு சென்சார்கள் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டதால் பழைய பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது

முன்னதாக 535 கோடி மதிப்பீட்டில் புதிய பாம்பன் ரயில்வே கடல் பாலத்தின் பணி 2019 இல் தொடங்கியது பிறகு 2024 இல் டீசல் இன்ஜின் காலியான பயணிகள் ரேக்குகளை ஏற்றிக்கொண்டு புதிய பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரத்திற்குச் சென்றது

இதன் பிறகு புதிய பாலத்தின் மீது மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயிலின் காலி ரேக்குகளுடன் நண்பகலில் இரண்டாவது சோதனை ஓட்டம் நடைபெற்றது

நவம்பர் 2024 இல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி புதிய பாலத்தில் ரயில் இயக்க அனுமதி வழங்கினார் இந்த நிலையில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை இம்மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

Next Story
கதிர் தொகுப்பு
Trending News