Kathir News
Begin typing your search above and press return to search.

போடோ சமூகத்தினருக்கு அதிகாரம்: பிரதமர் மோடி கொடுத்த முக்கிய வாக்குறுதி!

போடோ சமூகத்தினருக்கு அதிகாரம்: பிரதமர் மோடி கொடுத்த முக்கிய வாக்குறுதி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 Feb 2025 7:57 PM IST

கோக்ராஜரில் 2025 பிப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமிலும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருவதாக நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தப் பணிகள் இன்னும் வீரியத்துடன் தொடரும் இன்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.


கோக்ரஜாரில் நடைபெறவுள்ள ஒரு நாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அறிவிப்பு குறித்த சமூக வலைதள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமியிலும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருகின்றன.

இந்தப் பணிகள் இன்னும் வீரியத்துடன் தொடரும். கோக்ராஜருக்கு நான் சென்றபோது நான் கண்ட துடிப்பான போடோ கலாச்சாரத்தை அன்புடன் நினைவு கூர்கிறேன்" என அவர் கூறியிருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News