Kathir News
Begin typing your search above and press return to search.

மகா சிவராத்திரி: இந்திய ரயில்வே சிறப்பு ஏற்பாடுகள்!

மகா சிவராத்திரி: இந்திய ரயில்வே சிறப்பு ஏற்பாடுகள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Feb 2025 4:48 PM IST

மகா கும்பமேளா 2025 இன் இறுதி அம்ரித் ஸ்னான் பிப்ரவரி 26-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான யாத்ரீகர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமத்தில் குளிக்க பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர். இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான பயணிகள் பிரயாக்ராஜுக்கு பயணம் செய்தனர். இதற்காக இந்திய ரயில்வே விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டது.


இதேபோல், மகா சிவராத்திரி ஸ்னானுக்குப் பிறகு கூடுதல் ரயில்களை இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே இயக்கத்தையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். மகா சிவராத்திரி அன்று அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்களின் வருகை எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஏராளமான ரயில்களை இயக்குவதோடு கூடுதலாக பாதுகாப்பு, தங்குமிடம் உள்ளிட்ட பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் குறிப்பிடத்தக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.


பிரயாக்ராஜ் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நிலையங்களிலும் 1,500 க்கும் மேற்பட்ட வணிகத் துறை ஊழியர்கள் மற்றும் 3,000 ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையின் 29 அணிகள், பெண்கள் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையின் 2 அணிகள், 22 நாய்களின் படைகள் மற்றும் 2 வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் பிரயாக்ராஜில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News