Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே நாடு- ஒரே துறைமுகம்: இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் மோடி அரசு!

ஒரே நாடு- ஒரே துறைமுகம்: இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் மோடி அரசு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Feb 2025 12:31 PM IST

இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், அதன் உலகளாவிய வர்த்தக இருப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் தொடர்ச்சியான முக்கிய முயற்சிகளை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார். கடல்சார் துறைக்காக மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகளின் பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க மும்பையில் நடைபெற்ற பங்குதாரர் கூட்டத்தின் போது இந்த முயற்சிகள் தொடங்கப்பட்டன.


இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் செயல்பாடுகளை தரப்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு முயற்சியான 'ஒரே நாடு-ஒரே துறைமுகம் செயல்முறை' அமைச்சர் தொடங்கிவைத்தார். திறன் பற்றாக்குறை, அதிகரித்த செலவுகள் மற்றும் செயல்பாட்டு தாமதங்களுக்கு வழிவகுக்கும் ஆவணங்கள் மற்றும் செயல்முறைகளில் உள்ள முரண்பாடுகளை அகற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சோனாவால், "தற்சார்பு, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு உந்துதல் தரும் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையுடன் இணக்கமானதாக தங்கள் அமைச்சகத்தின் முக்கியமான முயற்சிகளைத் தொடங்குவதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News