ஐரோப்பிய கமிஷன் தலைவர் இந்தியா வருகை: பிரதமர் மோடி சந்திப்பு!

By : Bharathi Latha
ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாட்டர் லியன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார் அவரை பிரதமர் மோடி வரவேற்றார். 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாட்டர் லியன் தனது குழுவினருடன் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். டெல்லியில் இந்தியா மற்றும் ஐரோப்பா ஒன்றியம் இடையிலான உறவு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் கிரீன் எனர்ஜி திறன் பாதுகாப்பு மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல அரசியல் ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் கையெழுத்து தாக்கப்படும் என நம்பப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்கு வருகை புரிந்த ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாட்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார். ஐரோப்பிய கமிஷன் தலைவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். பல்வேறு நாடுகளுக்கிடையே இந்தியா எவ்வாறு பொருளாதார செயல்பாடு உள்ளது என குறித்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
