Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் : மத்திய அரசு பரிசீலனை!

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் : மத்திய அரசு பரிசீலனை!
X

KarthigaBy : Karthiga

  |  1 March 2025 7:00 PM IST

மத்திய தொழிலாளர் அமைச்சக வட்டாரம் கூறும் தகவல்கள்: நாட்டில் தற்போது அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டப்படி அரசு பணியாளர்கள் மற்றும் அரசின் பங்களிப்போடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிபருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான வாய்ப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் வழங்குகிறது. இத்திட்டத்தில் பணியாளர் மற்றும் பணி வழங்கும் நிறுவனம் ஆகிய இருதரப்பின் பங்களிப்பு மட்டுமே இருக்கிறது .அரசுக்கு இதில் எந்த பங்களிப்பும் இல்லை.

மூன்றாவதாக கட்டுமான தொழிலாளர்கள் வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் அடல் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட சில திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இத்திட்டங்களில் முதலீட்டாளர்கள் 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் 1500 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதேபோல் வீடுகளில் பொருட்களை விற்பவர்கள் தினக்கூலிகள் உள்ளிட்ட முறை சாராத தொழிலாளர்களுக்கு பிரதான் மந்திரி ஷ்ரம்யோகி மந்தன் திட்டமும் விவசாய தொழிலாளர்களுக்கான பிரதான் மந்திரி கிசான் மந்தன் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சுயதொழில் செய்பவர்கள் முறைசாரா தொழிலாளர்கள் என நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்கனவே உள்ள சில ஓய்வூதிய திட்டங்களை இணைத்து ஓய்வூதிய கட்டமைப்பை நெறிப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தில் மக்கள் தங்கள் விருப்பப்படி இணைந்து கொள்ள முடியும். இத்திட்டம் எந்த ஒரு குடிமகனுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் .புதிய ஓய்வூதிய திட்டம் என்று இப்போதைக்கு அழைக்கப்படும் இந்த புதிய திட்டம் தற்போதுள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றாது .அதில் இணைக்கவும் செய்யாது. இது ஒரு தன்னார்வ ஓய்வூதிய திட்டமாக இருக்கும். இந்த திட்டம் தொடர்பான ஆவணங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் இது தொடர்பான ஆலோசனை தொடங்கும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News