பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி: என்ன தெரியுமா?

By : Bharathi Latha
மார்க் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று குஜராத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடியின் சமூக வலைதளத்தை பெண்கள் பதிவுகளை வெளியிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் தனது சமூக வலைத்தள கணக்குகளை பெண்களிடம் ஒப்படைத்து உள்ளார் பிரதமர் மோடி. முக்கியத்துவம் அளிக்கும் மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முழு ஏற்பாடு நடைபெற்று வருகிறது, அதில் பெண் போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் போலீசார் பிரதமர் மோடியின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை ஆகும். 2,300 க்கும் மேற்பட்ட பெண் போலீசர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இது குறித்து குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியது: இந்திய வரலாற்றில் முதல் முறையாக வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிபேடிற்கு பிரதமரின் வருகையில், மகளிர் தினம் கொண்டாட்டம் நடைபெறும், அவரது பாதுகாப்பிற்கு பெண் போலீசார் மட்டுமே பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும், இது பெண்களுக்கு கிடைத்த தனிச்சிறப்பு.
